News April 24, 2024

கட்டுப்பாட்டு அறையில் அதிரடி ஆய்வு

image

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது. வடக்கு மண்டல காவல்துறை தலைவர் க.ச.நரேந்திரன் நாயர், மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. கி.கார்த்திகேயன் ஆகியோர் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

Similar News

News November 19, 2025

தி.மலை: தலை நசுங்கி இளைஞர் பலி!

image

ஆரணி வட்டம், அரியப்பாடி, ஆரணி- சிறுமூர் சாலை பகுதியில், தனியார் பேருந்து ஒன்று சிறுமூர் சென்று கொண்டிருந்தது. அப்போது, அக்ராபாளையத்தை சேர்ந்த சக்திவேல் (16) என்பவர் ஒட்டி வந்த பைக், பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சக்திவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்றவர் ஆரணி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

News November 19, 2025

தி.மலை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (நவ.18) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News November 18, 2025

தி.மலை: உங்களிடம் செல்போன் உள்ளதா? இதை தெரிஞ்சுக்கோங்க!

image

செல்போன் தொலைந்து போனாலோ (அ) திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி (அ) <>இணையத்தில்<<>> செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் & உங்களின் தகவல்களை உள்ளிட்டு புகார் அளிக்கலாம். இதில் புகாரளித்தால் முதலில் செல்போன் செயலிழக்க செய்யப்பட்டு, பின் செல்போனை டிரேஸ் செய்து கண்டறிந்து, செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இதன் மூலம் 5 லட்சம் மொபைல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஷேர்!

error: Content is protected !!