News February 1, 2025
கடை இடித்த அதிகாரிகள் மீது புகார்

ஶ்ரீவி.கீழரதவீதியில் இருந்து அரங்கநாத பெருமாள் கோவிலுக்கு செல்லும் தெரு நுழைவுப் பகுதியில் உள்ள கடையை நகராட்சி அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடையின் முன் பகுதியை இடித்தனர். இந்நிலையில் கோயில் நிர்வாகம் கையகப்படுத்திய அக்கடையை இடித்த நகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோயில் நிர்வாகம் சார்பில்,நகர் காவல் நிலையத்தில் செயல் அலுவலர் சக்கரையம்மாள் புகார் அளித்துள்ளார்.
Similar News
News March 9, 2026
விருதுநகர்: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்…!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற<
News March 9, 2026
விருதுநகர்: ரேஷன் கடைக்கு போக வேண்டாம்! இந்த நம்பர் போதும்!

விருதுநகர் மாவட்ட மக்களே! ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.
News March 9, 2026
விருதுநகர்: குறுக்கே வந்த நாய்.. பறிபோன உயிர்

காரியாபட்டி அருகே கழுவனச்சேரி பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கந்தன் (45). இவர் மந்திரி ஓடையில் இருந்து காரியாபட்டி நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருக்கையில் நாய் சாலையின் குறுக்கே வந்துள்ளது. இதனால் நிலை தடுமாறி ஆட்டோ சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், படுகாயமடைந்த கந்தன், மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். போலீசார் விசாரணை.


