News August 8, 2025
கடையநல்லூர் தொழில் பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை

கடையநல்லூர், அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள தொழிற்பிரிவுகளுக்கு சேர்க்கை நடைபெறுகிறது. குறைந்தபட்ச கல்லித்தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி வயது வரம்பு 14 முதல் 40 வயது வரை. பெண்களுக்கு வயது வரம்பு இல்லை. பயிற்சி கட்டணம் முற்றிலும் இலவசம். இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், கடையநல்லூர் என்ற முகவரியிலும் 04633-290270 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News August 8, 2025
தோரணமலை முருகன் கோயிலில் நாளை கிரிவலம்

கடையம் அருகே அமைந்துள்ள தேரையர், சித்தர், அகத்தியர் வழிபட்ட தோரணமலை முருகன் கோயில் ஆடி மாத பெளர்ணமி கிரிவலம் நாளை காலை 6 மணி முதல் நடைபெறும். இந்த கிரிவலப்பாதையை வலம் வருவதற்கு சுமார் 1.15 மணி நேரம் ஆகும். அதனைத் தொடர்ந்து காலையும், மதியமும் அண்ணதானம் நடைபெறும்.
News August 8, 2025
தென்காசி மருத்துவமனையில் தாய்ப்பால் வார விழா

தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் இந்திய குழந்தை மருத்துவ குழுமம் மற்றும் தமிழ்நாடு மாநில பிரிவு இணைந்து நடத்தும் உலக தாய்ப்பால் வார விழா-2025 ஆகஸ்ட் முதல் வாரத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய விழாவில் மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில், தாய்ப்பால் வார விழாவின் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
News August 8, 2025
தென்காசி அரசு மருத்துவமனைகளில் வேலை

தென்காசி மாவட்ட நலச்சங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் அரசு மருத்துவமனைகளில் ஆலோசகர் (யோகா & இயற்கை மருத்துவம்), உதவியாளர் பணியிடங்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதி: 8th, B.Sc, Diploma ரூ.10,000 முதல் ரூ.40,000 வரை சம்பளம். விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ஆகஸ்டு 20க்குள் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு <