News September 5, 2024

கடையத்தை தாலுகாவாக்க அரசுக்கு பரிசீலனை

image

தென்காசி மாவட்டம் மேலாம்பூரை சேர்ந்தவர் முன்னாள் ஊராட்சி தலைவர் வின்சென்ட். இவர் கடையத்தை தனி தாலுகாவாக அமைக்க கோரி கடந்த மாதம் 30 ஆம் தேதி மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்துள்ளார். அந்த மனுவிற்கு இன்று(செப்.,5) பதில் வந்துள்ள கடிதத்தில் கடையத்தை தலைமை இடமாக கொண்டு புதிய வட்டம் அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்திருப்பதாக மாவட்ட ஆட்சியரின் நேர்முக கூடுதல் உதவியாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 11, 2025

தென்காசி: வாக்காளர்களே., இன்றே கடைசி!

image

தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் (SIR) நடைபெறுகிறது. இதில் வாக்காளர்கள் தங்கள் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்து சமர்ப்பிக்கின்றனர். இதற்கான காலக்கெடு இன்று (டிச.11) முடிவடைகிறது. ஆகவே வாக்காளர்கள் உடனடியாக SIR படிவங்களை நிரப்பி அருகில் உள்ள BLOக்களிடம் சமர்பித்திடுங்கள். உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலை பார்க்க <>இங்கு கிளிக் <<>>செய்யவும். இதனை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க

News December 11, 2025

தென்காசி: மின்சாரம் புகார் சேவை எண் அறிவிப்பு

image

தென்காசி மாவட்டத்தில் மின் சேவைகள், மின் கம்பி அறுந்து தொங்கிக் கொண்டிருந்தாலோ, மின் கம்பங்கள் உடைந்திருந்தாலோ, சாய்ந்திருந்தாலோ மற்றும் மின் தடை குறித்த புகார்களுக்கு உடனடியாக 24 மணி நேரமும் செயல்படும் மாநில மின் நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தை 94987 94987தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கபட்டுள்ளது. SHARE

News December 11, 2025

தென்காசி எஸ்.பி அலுவலகத்தில் குறைத்தீர்ப்பு கூட்டம்

image

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையில் பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்து தீர்வு வழங்கப்பட்டது. மேலும் பொதுமக்களின் புகார்களை விரைந்து விசாரணை செய்திட சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

error: Content is protected !!