News June 3, 2024
கடைசி நேரத்தில் தேர்தல் ஆணையர் குற்றச்சாட்டு

தேர்தல் ஆணையம் மீது மக்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்த சிலர் திட்டமிட்டு செயல்படுவதாக தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் குற்றஞ்சாட்டியுள்ளார். தேர்தலுக்கு 4 நாள்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் ஏதாவது ஒரு காரணத்தை கூறி வழக்குப்பதிவு செய்வதா? என ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பிய அவர், வாக்கு எண்ணிக்கை தொடர்பான தேர்தல் ஆணைய நடவடிக்கைகள் குறித்து சந்தேகம் எழுப்புவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.
Similar News
News September 20, 2025
Parenting: பிறந்த குழந்தைக்கு முத்தம் கொடுக்கலாமா?

பிறந்த குழந்தைக்கு நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். சளி பிடித்திருக்கும் நபர் முத்தமிட்டால் அந்த குழந்தைக்கு ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ் எளிதாக பரவுமாம். குழந்தையின் உடலுக்குள் நுழையும் இந்த வைரஸ் அலர்ஜியில் தொடங்கி, உறுப்பு செயலிழப்பை கூட ஏற்படுத்தும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் பிறந்த குழந்தைக்கு முத்தம் கொடுக்காதீர்கள். இந்த முக்கிய தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News September 20, 2025
அதிமுக கூட்டணியில் இணையும் கட்சிகள்: GK வாசன்

தேர்தலை எதிர்கொள்வதில் அதிமுக அணி வெற்றி அணியாக உருவெடுத்து இருப்பதாக ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். எத்தனை அணிகள் வேண்டுமானாலும் களத்தில் நிற்கலாம். ஆனால் மக்களின் எண்ணங்களை தொடர்ந்து பிரதிபலிப்பது அதிமுக கூட்டணி மட்டுமே என அவர் கூறியுள்ளார். வரும் காலங்களில் அதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேரக்கூடிய பிரகாசமான வாய்ப்பு இருப்பதாக ஜி.கே.வாசன் பேசினார்.
News September 20, 2025
லீவுக்கு முந்தைய நாள் இரவுக்கு இப்படி ஒரு பவரா?

‘ஹைய்யா.. நாளைக்கு லீவு’ என்பது, பள்ளிக் காலம் தொட்டே நம்முடன் கலந்துள்ள உணர்வு. என்னதான் விடுமுறை நாள் நமக்கு இன்பத்தை கொடுத்தாலும், அதற்கு முந்தைய நாளின் மாலைப்பொழுது கொடுக்கும் நிம்மதியை எந்த நாளும் கொடுத்திட முடியாது. ‘நாளை ஒருநாள் லீவ் இருக்கிறது’ என்ற நினைப்புடனே, முந்தைய நாளை ரசித்து அனுபவித்து வருபவர்கள் பலர். நீங்கள் லீவுக்கு முந்தைய நாளை எப்படி கழிப்பீர்கள்? கமெண்ட்ல சொல்லுங்க