News January 14, 2025
கடித்து குதறிய நாயை அடித்து கொன்ற மக்கள்

சேலம் மாநகராட்சியின் அம்மாப்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட ராஜகணபதி தெருவில் நாய் கடித்ததில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பொங்கல் பண்டிகை அன்று நிகழ்ந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் அச்சுறுத்தி வந்த நாயை பொதுமக்கள் அடித்தே கொன்றனர்.
Similar News
News July 11, 2025
சேலம் விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

சேலம் மாவட்ட விவசாயிகள் இ- வாடகை செயலி மூலம் வேளாண்மைப் பொறியியல் துறையின் வேளாண் இயந்திரங்களை குறைந்த வாடகைக்கு எடுத்து பயன்பெறலாம் என ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். விவசாயிகள் தங்கள் கைபேசியில் உழவர் செயலியை தரவிறக்கம் செய்து அதில் உள்ள இ-வாடகை செயலி மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது வேளாண்மைப் பொறியியல் துறையின் இணையதளமான: https://mtsaed.tn.gov.in/evaadagai எனும் தளத்தை அணுகலாம்.(SHARE)
News July 10, 2025
சேலம்: 8 ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இயக்கம்

சேலம் ரயில்வே கோட்ட பகுதிகளில் இயங்கும் கோவை – மன்னார்குடி செம்மொழி – கோவை தினசரி எக்ஸ்பிரஸ் (16616/16615), கோவை – திருப்பதி – கோவை எக்ஸ்பிரஸ் (22616/22615), கோவை – நாகர்கோவில் – கோவை எக்ஸ்பிரஸ் (22668/22667), கோவை – ராமேஸ்வரம் – கோவை வாராந்திர எக்ஸ்பிரஸ் (16618/16617) ஆகிய 8 ரயில்களில் தற்காலிகமாக கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
News July 10, 2025
சேலம் மாவட்டத்தில் முகாம் நடைபெறும் இடங்கள்

சேலத்தில் வருகின்ற ஜூலை 15ஆம் தேதி ’உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில், எந்தெந்த இடங்களில் நடைபெறும் எனும் அறிவிப்பு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சூரமங்கலம், எருமாபாளையம், எடப்பாடி, அயோத்தியாபட்டினம், திருமலகிரி, வீரபாண்டி ஆகிய பகுதிகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.