News December 28, 2025
கடவூர் தாலுகாவில் லாட்டரி விற்ற இரண்டு பேர் கைது

கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா சிந்தாமணிப்பட்டி மற்றும் பாலவிடுதி காவல் நிலைய பகுதிகளுக்கு உட்பட்ட குருணி குளத்துப்பட்டி, கடவூர் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் லாட்டரி விற்ற சங்கப்பிள்ளை 53, பாலசுப்பிரமணியன் 57 ஆகிய 2 பேர் மீது வழக்குப் பதிந்து இன்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்தனர்
Similar News
News December 30, 2025
கரூர்: ரயில் சக்கரத்தில் சிக்கி பலி

கரூர் மாவட்டம், மண்மங்கலம் பகுதியைச் சேர்ந்தர் முருகேசன். இவர் கர்நாடகா மாநிலம், மங்களூரில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இவர், நேற்று அதிகாலை 4:30 மணிக்கு மங்களூரு – புதுச்சேரி விரைவு ரயிலில் கரூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே வந்த போது எதிர்பாராத விதமாக ரயில் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரயில்வே போலீசார் முருகேசன் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
News December 30, 2025
கரூர்: கூட்டுறவு வங்கியில் வேலை! APPLY NOW!

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழக அரசு வேலை
2. பணியிடங்கள்: 50
3. வயது: 18-50
4. சம்பளம்: ரூ.32,020 – ரூ.96,210
5. கல்வி தகுதி: Any Degree, B.E/B.Tech
6. கடைசி தேதி: 31.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க.
News December 30, 2025
மண்மங்கலம் அருகே விபத்து

மண்மங்கலம் சின்னகாளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் கலாவதி. இவர் தனது ஸ்கூட்டியில் உறவினர் பசுவாயி என்பவரை அமர வைத்துக் கொண்டு நேற்று சின்னகாளிபாளையம் சாலையில் சென்றபோது எதிரே சிவப்பிரகாஷ் ஒட்டி வந்த பைக் மோதியதில் இருவரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். இதில், மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.


