News May 6, 2024

கடல் அலை சீற்றம் நீடிக்கும்

image

தென்னிந்திய கடலோர பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடல் அலை சீற்றத்துடன் காணப்படுகிறது. இதற்கு “கள்ளக்கடல்”என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதன்படி இன்று ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை இன்று இரவு வரை நீடிக்கும் எனவும், 5 அடி முதல் 7 அடிவரை கடல் அலை சீற்றத்துடன் காணப்படும் என இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையம் தெரிவித்துள்ளது.

Similar News

News April 20, 2025

ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

image

இன்று (ஏப்ரல் 19) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X  வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.

News April 19, 2025

இராமநாதபுரம்: கோடை கால இலவச பயிற்சி முகாம் – ஆட்சியர்

image

இராமநாதபுரம், சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கத்தில் கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம் ஏப்.25 முதல் மே.15 வரை (21 நாட்கள்) காலை, மாலை இரு வேளைகள் நடைபெறும். இதில், தடகளம், ஹாக்கி, டென்னீஸ், இறகுப்பந்து, ஜூடோ, இதர விளையாட்டுகளுக்கு இலவச பயிற்சி & அதற்கான சான்றிதழ் வழங்கப்படும். மாவட்ட விளையாட்டு, இளைஞர் நலன் அலுவலத்தில் பெயரை பதிவு செய்ய வேண்டும் – ஆட்சியர் (18 வயதிற்குட்பட்டவர்கள்)*ஷேர் பண்ணுங்க

News April 19, 2025

சிறுமிகளுக்கு சர்ச் பாதிரியார் பாலியல் தொந்தரவு

image

மண்டபம், கோயில்வாடி புனித அருளானந்தர் சர்ச்சில் பாதிரியாராக பணிபுரிந்தவர் ஜான் ராபர்ட் (46). இவர் 2022ம் ஆண்டு வழிபாட்டிற்கு வந்த 3 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளார். குழந்தைகள் நலக்குழுவின் புகாரில் போக்சோ வழக்கில் ஜான்ராபர்ட்டை கைது செய்தனர். இந்த வழக்கில் ராமநாதபுரம் மாவட்ட விரைவு மகிளா நீதிமன்றம் ஜான்ராபர்ட்டுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.9000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

error: Content is protected !!