News March 20, 2024
கடலோர காவல்படை மீனவர்களுக்கு எச்சரிக்கை

பாராளுமன்ற தேர்தலையொட்டி புதுவை கடலோர காவல்படை போலீசார் இன்ஸ்பெக்டர் வேலய்யன் தலைமையில் இன்று கடலுக்கு சென்று மீன் பிடித்த மீனவர்களிடம் உரிமம் உள்ளதா?, மது, பணம், பரிசு பொருட்கள் கடத்தப்படுகிறதா? என சோதனை நடத்தினர். மேலும், கடலில் புது நபர்கள் நடமாட்டம் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும். படகுகளில் மதுபானம், பரிசு, பணம் கடத்தினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.
Similar News
News November 3, 2025
புதுச்சேரி: 12th போதும் ரூ.63,200 சம்பளத்தில் வேலை!

இந்திய உள்நாட்டு நீர்வழி ஆணையத்தில் காலியாக உள்ள 14 கீழ் பிரிவு எழுத்தர், இளநிலை நீர்வரைபட அளவையர், மூத்த கணக்கு அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 12th போதுமானது. சம்பளம் மாதம் ரூ.9,900 முதல் ரூ.63,200 வரை வழங்கப்படும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 05.11.2025 தேதிக்குள் <
News November 3, 2025
புதுச்சேரி சைபர் கிரைம் எஸ்.பி எச்சரிக்கை

புதுச்சேரி சைபர் கிரைம் எஸ்.பி.ஸ்ருதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “பொதுமக்கள் தங்களுடைய ஆதார் அட்டை, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பிற ஆவணங்களை நண்பர்கள், உறவினர்கள் மற்றும் தெரியாத நபர்களுக்கு வங்கி கணக்கு மற்றும் சிம் கார்டு வாங்கி தருவது, பணத்திற்கு ஆசைப்பட்டு விற்பது மற்றும் பயன்பாட்டிற்கு தருவதை தவிர்க்க வேண்டும்.” என எச்சரித்தார்.
News November 3, 2025
புதுவை: ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்

புதுச்சேரி, மண்ணாடிபட்டு மற்றும் திருபுவனை சட்டசபை தொகுதிகளின் ஓட்டுச்சாவடி முகவர்களின் ஆலோசனைக் கூட்டம் ராஜிவ்காந்தி அரசு கால்நடை மருத்துவக் கல்லுாரியில் நடந்தது. வாக்காளர் பதிவு அதிகாரி குமரன் முன்னிலையில் நடந்த கூட்டத்தில், மாவட்ட தேர்தல் அதிகாரியாகன ஆட்சியர் குலோத்துங்கன், ஓட்டுச்சாவடி முகவர்களின் கருத்துகளையும் மற்றும் ஆலோசனைகளையும் கேட்டறிந்தார்.


