News September 15, 2025

கடலூர்: 8-ம் வகுப்பு மாணவி பலாத்காரம்

image

பண்ருட்டி அருகே உள்ள கணிசபாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பாலா என்ற சதீஷ்ராஜ் (19). கூலித் தொழிலாளியான இவர், பண்ருட்டி அருகே 8-ம் வகுப்பு பயின்று வரும் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதையறிந்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், பண்ருட்டி போலீசார் பாலாவை கைது செய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Similar News

News September 15, 2025

கடலூர்: இன்ஜினியர் பணியிடங்கள் அறிவிப்பு

image

கடலூர் மக்களே, மத்திய அரசின் மின்சாரத்துறையில் காலியாக உள்ள 1543 இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.Sc, B.E., B.Tech, M.Tech. ME படித்தோர் விண்ணபிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து, செப்.17-க்குள் விண்ணபிக்கலாம். இத்தகவலை B.E முடித்துவிட்டு வேலை தேடுவோருக்கு SHARE பண்ணுங்க

News September 15, 2025

கடலூர்: 4.51 லட்சம் பேர் திமுகவில் சேர்ப்பு

image

ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் திட்டக்குடி, விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி ஆகிய சட்டசபை தொகுதிகள் அடங்கிய கடலூர் மேற்கு மாவட்டத்தில் மட்டும் இதுவரை 4 லட்சத்து 51 ஆயிரத்து 16 பேர் திமுகவில் இணைந்துள்ளதாக கடலூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான கணேசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்த உங்கள் கருத்தை கமெண்டில் தெரிவிக்கவும். SHARE!

News September 15, 2025

விருதாச்சலம்: புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு

image

விருதாச்சலம் அடுத்த முகாசபரூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இரண்டு வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு விழா நேற்று (செப்.14.) நடைபெற்றது. இதற்கு பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மதியழகன் தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் கௌதமி முன்னிலை வகித்தார். நிகழ்வில் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் கனக கோவிந்தசாமி குத்து விளக்குகேற்றி வகுப்பறைகளை மாணவர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

error: Content is protected !!