News January 25, 2026
கடலூர்: 6 பேர் அதிரடி கைது

நெய்வேலி காவல் நிலைய ஆய்வாளர் வீரமணி மற்றும் போலீசார் நேற்று (ஜன.24) நெய்வேலி ஆர்ச்கேட் அருகே உள்ள காட்டுப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 21 கிலோ கஞ்சா வைத்திருந்த ஒடிசாவை சேர்ந்த அபிலாஷ் குரு (28), அலிசா (24), மந்தாரக்குப்பத்தை சேர்ந்த குட்டி தேவா (எ) வந்தியதேவன் (24), வடக்கு வெள்ளூர் சுதாகர் (27), மண்டை ஓடு (எ) சந்துரு (26), ஜீவா (25) ஆகியோரை கைது செய்தனர்.
Similar News
News January 27, 2026
கடலூர்: தமிழ் தெரியுமா? ரிசர்வ் வங்கியில் வேலை!

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 572 அலுவலக உதவியாளர் பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இந்த பணிக்கு சம்பளமாக ரூ.24,250 முதல் ரூ.53,330 வரை வழங்கப்படும். தமிழக பணியிடங்களுக்கு தமிழ் தெரிந்திருப்பது கட்டாயம். விருப்பமுள்ளவர்கள்<
News January 27, 2026
கடலூர்: 51 கம்பெனிகள் மீது நடவடிக்கை

கடலூர் மாவட்டத்தில், குடியரசு தினத்தன்று ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்காமல் நிறுவனங்கள் ஏதேனும் செயல்படுகிறதா என தொழிலாளர் துறை உதவி ஆணையர் ஞானப்பிரகாசம் தலைமையில் போலீசார் சோதனை செய்தனர். இதில் விதிமுறைகளை மீறி இயங்கிய 51 நிறுவனங்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 27, 2026
கடலூர்: கேஸ் மானியம் வரவில்லையா? இதை செய்யுங்க!

மத்திய அரசு தகுதியான நுகர்வோருக்கு ஒவ்வொரு ஆண்டும் கேஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்குகிறது. அந்த மானியம் உங்களுக்கு வரவில்லையா?. உங்கள் எரிவாயு வழங்குநரின் இணையதளத்திற்கு செல்லுங்கள். அங்கு Check DBTL Status (அ) Subsidy Status என்பதை க்ளிக் செய்து நுகர்வோர் எண், மொபைல் எண்ணை உள்ளிட்டு மானிய வரவை சரிபார்க்கலாம். மேலும் உங்கள் எரிவாயு நிறுவனத்தின் Toll-Free எண்ணிற்கும் அழைக்கலாம். SHARE NOW.


