News December 1, 2025

கடலூர்: 500 போலீசார் அனுப்பி வைப்பு

image

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மகா தீப விழா நடைபெற உள்ளது. இதில் டிசம்பர் 3-ம் தேதி மகா தீபம் ஏற்றப்பட உள்ள நிலையில், பாதுகாப்பு பணிக்காக கடலூர் மாவட்டத்தில் இருந்து ஆயுதப்படை, போக்குவரத்து, குற்றப்பிரிவு போலீசார் என 500 பேரை திருவண்ணாமலைக்கு எஸ்.பி ஜெயக்குமார் அனுப்பி வைத்துள்ளார்.

Similar News

News December 1, 2025

கடலூர்: மயங்கி விழுந்த சிறுவன் திடீர் சாவு

image

விருத்தாசலம் பெரியார் நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் (50). இவரது மகன் கிஷோர் (16) பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இவர்களது புதுமனை புகுவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது வீட்டில் இருந்த கிஷோர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 1, 2025

கடலூர்: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

News December 1, 2025

கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் டிசம்பர் மாதம் தொடங்கி, பிப்ரவரி மாதம் வரை வாரந்தோறும் சனிக்கிழமை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான 28 சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் (நவ.30) தெரிவித்துள்ளார். இதில், மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு தேவையான UDID அட்டை உள்ளிட்ட பல்வேறு தேவைகளை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!