News August 14, 2024
கடலூர்: 350 காவலர்கள் பணியிட மாற்றம்

கடலூர் மாவட்ட எஸ்.பி. இராஜாராம், மாவட்டத்திற்குள் ஒரே காவல் நிலையத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள், காவலர்கள் உள்பட 350 பேரை பணியிட மாற்றம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் அவர்களை உடனடியாக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட புதிய காவல் நிலையங்களுக்கு பணிக்கு செல்ல வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News October 25, 2025
சேத்தியாத்தோப்பு: 11 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது

சேத்தியாத்தோப்பு அடுத்த கீழ்வளையமாதேவி கிராமத்தைச் சேர்ந்தவர் கணபதி (39). இவர் மீது சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்தில் கடந்த 2014-ம் ஆண்டு சிறுமியை கடத்திய வழக்கு உள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது கணபதி திடீரென தலைமறைவாகி விட்டார். இதையடுத்து கோர்ட்டு அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டது. தொடர்ந்து கடந்த 11 ஆண்டுகளாக போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று கணபதி போலீசில் சிக்கினார்.
News October 25, 2025
கடலூர்: வெள்ளப்பெருக்கில் சிக்கி முதியவர் பரிதாப பலி

கடலூர் அருகே பெத்தாங்குப்பம் மேட்டு தெருவில் வசித்து வந்த மணிவேல் (60) என்பவர் நேற்று மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றபோது பரவனாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டார். தீயணைப்புத் துறையினர் பேரிடர் மீட்பு படையினர் படகுகள் மூலம் தேடிய நிலையில் இன்று (அக்.25) காலை பரவனாற்றில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
News October 25, 2025
கடலூர்: ரயில்வேயில் வேலை.. APPLY NOW!

இந்திய ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 8850 பணியிடங்களை நிரப்ப ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு 12th முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.35,400 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் முதல் <


