News March 26, 2024

கடலூர் 10ம் வகுப்பு பொது தேர்வு கலெக்டர் ஆய்வு 

image

கடலூர் மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு இன்று தொடங்கியது. இந்த தேர்வை கடலூர் மாவட்டத்தில் 438 பள்ளிகளில் பயிலும் 17,194 மாணவர்கள், 15,778 மாணவிகள் என மொத்தம் 32,972 பேர் தேர்வு எழுதுகின்றனர்.இதற்காக மொத்தம் 152 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 1,957 தனித் தேர்வர்கள் 7 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர். இதில் கடலூர் மஞ்சகுப்பம் அரசு பள்ளியில் கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டார்.

Similar News

News February 13, 2026

கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் உயர்கல்வி பயிலும் குழந்தைகளுக்கு, இணையவழி வாயிலாக திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கு பெற்றோர்கள் தங்களது நலவாரிய அடையாள அட்டையுடன் https://application.tnbocw.com/ என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என கடலூர் மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.

News February 13, 2026

கடலூர்: சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் கைது

image

திட்டக்குடி பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் (22). இவர் 17 வயது சிறுமியை காதலித்து, திருமணம் செய்து கொண்டு, தனது வீட்டில் தங்க வைத்து, பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்த சிறுமி கர்ப்பமாகி சிசு இறந்து விட்டது. இதுகுறித்து தகவல் அந்த மாவட்ட குழந்தைகள் நல குழு அலுவலர்கள் நேரில் சென்று விசாரித்தனர். அதைத் தொடர்ந்து புகாரின் பேரில் திட்டக்குடி மகளிர் போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.

News February 13, 2026

கடலூர்: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

கடலூர் மாவட்டத்தில், நேற்று (பிப்.11) இரவு 10 மணி முதல், இன்று (பிப்.12) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!