News March 5, 2026

கடலூர்: விஷம் குடித்து காதல் ஜோடி

image

பண்ருட்டி, காட்டாண்டி குப்பத்தைச் சேர்ந்த சுந்தரவேலு(23), மற்றும் மேல்மாம்பட்டை சேர்ந்த ராஜஸ்ரீ(19) 2பேரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் இவர்களது காதலுக்கு இரு வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறி, ராசாபாளையத்திற்கு சென்றனர். அங்கு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று, மயங்கி கிடந்தவர்களை மீட்டு பண்ருட்டி மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து காடாம்புலீயூர் போலீசார் விசாரணை.

Similar News

News April 6, 2026

கடலூர்: பள்ளி மாணவி கர்ப்பம்

image

நெல்லிக்குப்பம் அடுத்த தோட்டப்பட்டை சேர்ந்தவர் பிரவீன்(20). இவர் 12-ம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவியை காதலித்தார். மேலும் மாணவியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அடிக்கடி சென்று தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதில் மாணவி கர்ப்பமாகியுள்ளார். இதுகுறித்து பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசார், பிரவீன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

News April 6, 2026

கடலூர்: நேருக்கு நேர் மோதி விபத்து – தொழிலாளி பலி

image

பெண்ணாடம் அடுத்த கொத்தட்டையை சேர்ந்தவர் தொழிலாளி நேர்மராஜ்(42). இவர் நேற்று இரவு வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள் வாங்குவதற்காக பைக்கில் இறையூர் நோக்கி புறப்பட்டார். அப்போது எதிரே வந்த பைக் மோதியதில் படுகாயம் அடைந்த நேர்மராஜ், அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து பெண்ணாடம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News April 5, 2026

கடலூர்: உங்க Phone காணாமல் போனால் கவலை வேண்டாம்

image

கடலூர் மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இங்கு <<>>கிளிக் செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம். உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!