News March 6, 2026

கடலூர்: விருப்ப மனு அளித்த அமைச்சர்!

image

சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஒஅலரும் மனு அளித்து வருகின்றனர், அவ்வகையில், திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினரும், தொழிலாளர் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சருமான சி.வே.கணேசன். சட்டமன்ற தேர்தலில் திட்டக்குடி தொகுதியில் திமுக சார்பில் மீண்டும் போட்டியிட, அறிவாலயத்தில் நேற்று (மார்.5) விருப்பம் மனுவினை அளித்தார். இதில், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Similar News

News March 7, 2026

கடலூர்: வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

image

வேப்பூர் அருகே விளம்பாவூரை சேர்ந்தவர் முத்துலட்சுமி(40). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டிவிட்டு வெளியூருக்கு சென்றுவிட்டார். இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் முத்துலட்சுமி வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து, பீரோவில் இருந்த 5 பவுன் நகைகள் மற்றும் ரூ.57 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருயுள்ளனர். இதுகுறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News March 7, 2026

கடலூர்: சிறுவனிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது

image

விருத்தாசலம் அடுத்த தரிசு கிராமத்தை சேர்ந்தவர் மாதவன் (16). இவரிடம் இருந்த ரூ.10 ஆயிரம் மற்றும் ஒரு பவுன் நகை, வெள்ளி அரைஞான் கொடி ஆகியவற்றை பரவளூரை சேர்ந்த விஷ்வா, புது குப்பத்தை சேர்ந்த விக்னேஷ் (30), அருண்குமார் (23) ஆகியோர் பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குபதிந்து விக்னேஷ், அருண்குமார் ஆகியோரை இன்று கைது செய்தனர். தொடந்து, விஷ்வாவை தேடி வருகின்றனர்.

News March 7, 2026

கடலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

கடலூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.06) இரவு 10 முதல் இன்று (மார்ச்.07) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!