News October 24, 2025
கடலூர்: விதை பரிசோதனை நிலையத்தில் ஆய்வு

கடலூர் விதை பரிசோதனை நிலையத்தில், இன்று(ஆக்.24) காஞ்சிபுரம் விதை பரிசோதனை அலுவலர் ராஜகிரி அனைத்து பதிவேடுகளையும் ஆய்வு செய்தார். மேலும் விதை முளைப்பு திறன் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். இதில், 2008 விதை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அதில் 95 விதை மாதிரிகள் தர மற்றவை என கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் போது வேளாண் அலுவலர் விஜயா, தில்லைக்ரசி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Similar News
News October 25, 2025
கடலூர்: ஆசிரியை தற்கொலையில் திடீர் திருப்பம்

விருத்தாசலம் அடுத்த விஜயமாநகரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜவேல் என்பவரது மகள் ராதிகா (35). ஆலடி அருகே உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்த ராதிகா கடந்த சில நாட்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் அவரை காதலித்து ஏமாற்றிவிட்டு தற்கொலைக்கு தூண்டியதாக மங்கலம்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து நேற்று பள்ளி தாளாளர் மகனான பிரின்ஸ் நவீன் (37) என்பவரை கைது செய்தனர்.
News October 25, 2025
கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று (அக்.24) இரவு 10 மணி முதல் இன்று (அக்.25) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்.
News October 24, 2025
கடலூர்: மாவட்ட வருவாய் அலுவலர் பணியிட மாற்றம்

கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் மா.ராஜசேகரன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்ட வருவாய் அலுவலராக பணிபுரிந்த மா. ராஜசேகரன் தூத்துக்குடி மாவட்ட நெடுஞ்சாலை (நில எடுப்பு பிரிவில்) சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம் இன்று உத்தரவிட்டுள்ளார்.


