News November 3, 2025
கடலூர்: வாலிபர் மீது போக்சோ வழக்கு

கடலூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி இன்ஸ்டாகிராம் மூலம் கன்னியாகுமரி பகுதியைச் சேர்ந்த 21 வயது வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இதில் இருவரும் கோயிலில் திருமணம் செய்து கொண்டு தனியாக வீட்டில் ஒன்றாக வசித்து வந்தனர். இந்நிலையில் தற்போது 8 மாத கர்ப்பமாக சிறுமி இருந்து வருகிறார். இதுகுறித்து அறிந்த மகளிர் காவல் துறையினர், நேற்று வாலிபர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 3, 2025
கடலூர்: வீடு புகுந்து லேப்டாப் திருடியவர் கைது

குறிஞ்சிப்பாடி வேலமுதலி தெருவைச் சேர்ந்தவர் முருகன் இவர் புதுவையில் ஐடி கம்பெனியில் வேலை செய்து வருகிறார். வெளியூர் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த 2 லேப்டாப் திருட்டு போயிருந்தது தெரிய வந்தது. இது குறித்து குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்ததில் கடலூர் அண்ணா நகரைச் சேர்ந்த சபரிநாதன் (21) என்பவரை கைது செய்துள்ளனர்.
News November 3, 2025
கடலூர்: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். ஷேர் பண்ணுங்க!
News November 3, 2025
கடலூர்: சாராய ஊறல் அமைப்பு-2 பேர் கைது

சிறுதொண்டமாதேவி முந்திரி காட்டில் சாராயம் காய்ச்சப்படுவதாக காடாம்புலியூர் போலீசாருக்கு நேற்று கிடைத்த தகவலின் அடிப்படையில், போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதனை அடுத்து, சாராயம் காய்ச்சுவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஊறல் கண்டுபிடிக்கப்பட்டு கீழே கொட்டி அழிக்கப்பட்டது. மேலும் சிறுதொண்டமாதேவியைச் சேர்ந்த மேகநாதன் (37), பாஸ்கர் (37) என்ற 2 பேரை கைது செய்து, மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.


