News April 25, 2024

கடலூர் வழியாக நாகர்கோவிலுக்கு சொகுசு பேருந்து

image

புதுச்சேரியில் இருந்து தென் தமிழகத்திற்கு மற்றும் குமரி போன்ற சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் சென்று வர வசதியாக, 45 இருக்கைகளுடன் கூடிய புதுச்சேரி – நாகர்கோவில் புதிய சொகுசு (Ultra Deluxe) பேருந்து (PRTC) இன்று (25/04/2024) முதல் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி டவுன்ஷிப், விருத்தாச்சலம் வழியாக நாகர்கோவில் சென்றடையும். ( இந்த பேருந்து கடலூரில் இருந்து மாலை 7 மணிக்கு புறப்படும் )

Similar News

News March 5, 2026

கடலூர்: பள்ளி மாணவன் பரிதாப பலி

image

விருத்தாசலம் அடுத்த பூதாம்பூரை சேர்ந்தவர் வீராசாமி மகன் பரத் (17). இவர் நல்லூரில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். நேற்று மதியம் பரத் வேப்பூர்-விருத்தாசலம் சாலையில் பைக்கில் சென்றபோது எதிரே வந்த மற்றொரு பைக் மீது நேருக்குநேர் மோதிக்கொண்டன. இதில் படுகாயமடைந்த பரத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வேப்பூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

News March 5, 2026

கடலூர்: பள்ளி மாணவன் பரிதாப பலி

image

விருத்தாசலம் அடுத்த பூதாம்பூரை சேர்ந்தவர் வீராசாமி மகன் பரத் (17). இவர் நல்லூரில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். நேற்று மதியம் பரத் வேப்பூர்-விருத்தாசலம் சாலையில் பைக்கில் சென்றபோது எதிரே வந்த மற்றொரு பைக் மீது நேருக்குநேர் மோதிக்கொண்டன. இதில் படுகாயமடைந்த பரத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வேப்பூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

News March 5, 2026

கடலூர்: விஷம் குடித்து காதல் ஜோடி

image

பண்ருட்டி, காட்டாண்டி குப்பத்தைச் சேர்ந்த சுந்தரவேலு(23), மற்றும் மேல்மாம்பட்டை சேர்ந்த ராஜஸ்ரீ(19) 2பேரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் இவர்களது காதலுக்கு இரு வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறி, ராசாபாளையத்திற்கு சென்றனர். அங்கு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று, மயங்கி கிடந்தவர்களை மீட்டு பண்ருட்டி மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து காடாம்புலீயூர் போலீசார் விசாரணை.

error: Content is protected !!