News August 11, 2024
கடலூர் வழியாக அஹமதாபாத் ரயில் சேவை

திருச்சி-அஹமதாபாத் விரைவு ரயில் ஆகஸ்ட் 18 வரை சிதம்பரம், கடலூர் துறைமுகத்தில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், டிசம்பர் 29 வரை நீட்டிக்கபட்டுள்ளது. அதன்படி திருச்சியில் காலை 5.40 மணிக்கு புறப்பட்டு கடலூருக்கு 9.32 மணிக்கு வந்தடையும். மறுமார்க்கத்தில் அஹமதாபாத்திலிருந்து இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு கடலூருக்கு மறுநாள் காலை 9.30 மணிக்கு வந்து செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்தது.
Similar News
News March 12, 2026
கடலூர்: ரயில் மோதி முதியவர் பலி

விருத்தாசலம் அருகில் சென்னையில் இருந்து நேற்று இரவு ராமேஸ்வரம் நோக்கி சென்ற சேது எக்ஸ்பிரஸ் ரயில் சென்றபோது, தண்டவாளத்தை கடக்க முயன்ற 60 வயது மதிக்கத்தக்க முதியவர் மீது மோதியது. இந்த விபத்தில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து விருத்தாசலம் ரயில்வே போலீசார் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News March 12, 2026
கடலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

கடலூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச் 11) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச் 12) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News March 11, 2026
கடலூர்: 10-ம் வகுப்பு தேர்வில் 407 மாணவர்கள் ஆப்சென்ட்

கடலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. இந்த தேர்வை மாவட்டத்தில் 33,449 மாணவர்கள் எழுத ஏற்பாடு செய்யப்பட்டு 161 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது. இந்நிலையில், 407 மாணவ மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை எனவும், 33042 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


