News January 13, 2026

கடலூர்: வழிப்பறி செய்தவருக்கு மாவுக்கட்டு போட்ட போலீஸ்

image

சேராகுப்பம் பெட்ரோல் பங்கிற்கு டூவீலர்களில் பெட்ரோல் போட வந்த 4 பேர், பெட்ரோல் பங்க் மேனேஜர் மணிகண்டனிடம் (34) தகறாரில் ஈடுபட்டு, அவரிடம் இருந்த ரூ.5000 பணத்தை பிடுங்கி சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் தமிழரசன் (29), ரமணன் (29) ஆகியோரை வடலூர் போலீசார் நேற்று கைது செய்தனர். இதில் ரமணன் தப்பி ஓடிய போது, கீழே விழுந்ததில் கை எலும்பு முறிந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Similar News

News January 31, 2026

கடலூர்: சைக்கிள் மீது லாரி மோதி ஒருவர் பலி

image

காட்டுமன்னார்கோவில் அடுத்த கோவில்பத்து பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி வெள்ளைச்சாமி (60). இவர் நேற்று கச்சேரி ரோடு வழியாக சைக்கிளில் சென்றபோது, பின்னால் வந்த லாரி, சைக்கிள் மீது மோதியது. இதில் வெள்ளைச்சாமி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

News January 31, 2026

கடலூர்: ரோந்து செல்லும் அதிகாரிகள் முழு விவரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (ஜன.30) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.31) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 30, 2026

கடலூர்: சகல செளபாக்கியமும் கிடைக்க இங்கு போங்க !

image

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள தில்லை காளி கோயில் 1000 ஆண்டுகள் பழமையானதாகும். பார்வதியின் மீது கோபமுற்ற சிவன் கோர முகம் கொண்ட காளியாக மாற சாபமிட்டார். பின்னர் இருவருக்கு நடந்த நடன போட்டியில் தோல்வியடந்த காளி இந்த தில்லை பகுதியை வந்தடைந்தார். முற்காலத்தில் போருக்கு செல்லும் வீரர்கள் காளியை வணங்கி விட்டு செல்வார்கள். தில்லை காளியை வணங்கினால் சகல செளபாக்கியமும் கிடைக்கும் எனக் கூறுகின்றனர்.

error: Content is protected !!