News November 6, 2025

கடலூர்: வயலில் இறந்து கிடந்த முதியவர்!

image

விருத்தாசலத்தை அடுத்து கிளிமங்கலம் மயானத்துக்கு செல்லும் வழியில் முதியவர் ஒருவர் நேற்று (நவ.05) இறந்து கிடந்தார். இது குறித்த தகவல் அறிந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அவர் முருகன் குடியைச் சேர்ந்த ஆறுமுகம் (65) என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News November 6, 2025

கடலூர்: பேருந்து முன்பு பாய்ந்து வாலிபர் தற்கொலை

image

பாளையங்கோட்டை பொட்டக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் திருமலை ராஜன் (27). இவர் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வதற்காக ஒருவரிடம் பணம் கொடுத்து ஏமாந்து விட்டதாகவும், இதனால் மன உளைச்சலில் இருந்தவர் பாளையங்கோட்டையில் அரசு பேருந்து முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

News November 6, 2025

கடலூர்: அரசு வாங்கித் தருவதாகக் கூறி மோசடி!

image

ஸ்ரீமுஷ்ணம் அடுத்த மழவராயநல்லூரைச் சேர்ந்தவர் சத்தியராஜ் (37). இவருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசைவார்த்தை கூறி கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு சிதம்பரத்தைச் சேர்ந்த தீபக் (41) என்பவர் ரூ.13 லட்சம் பெற்றுள்ளார். அதன் பிறகு வேலை வாங்கி கொடுக்காமல் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீபக்கை நேற்று கைது செய்துள்ளனர்.

News November 6, 2025

கடலூர்: தேர்வு இல்லை-அரசு வேலை!

image

அணுசக்தித் துறையில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாயுள்ளது.

1. வகை: மத்திய அரசு
2. காலியிடங்கள்: 405
3. கல்வித் தகுதி: 10th & ITI Pass in respective trades
4.சம்பளம்: ரூ.9,600 – ரூ.10,560
5. கடைசி நாள்: 15.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <>CLICK<<>> செய்க
இந்த தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க…

error: Content is protected !!