News February 2, 2026

கடலூர்: லாரி சக்கரத்தில் சிக்கி பரிதாப பலி

image

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அடுத்த வலசக்காடு பகுதியைச் சேர்ந்தவர் தொழிலாளி மதிவாணன் (45). இவர் நேற்று தனது பைக்கில் எறும்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அருகே சென்றபோது, அவ்வழியே வந்த லாரி ஒன்று பைக் மீது மோதியது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய மதிவாணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News

News February 8, 2026

கடலூர்: அழுகிய நிலையில் சடமாக கிடந்த முதியவர்

image

கடலூர் புதுசுனாமி நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன்(65). இவர் செல்லங்குப்பம் அருகில் உள்ள குட்டையில் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த கடலூர் முதுநகர் போலீசார் விரைந்து வந்து, குட்டையில் இருந்து கிடந்த ராமச்சந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News February 8, 2026

கடலூர்: இந்த நம்பர் ரொம்ப முக்கியம்!

image

கடலூர் மக்களே., அடிக்கடி வீட்டில் கரண்ட் மற்றும் வோல்டேஜ் பிரச்சனையா? இனி EB ஆபிஸை தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 9445850811 மற்றும் 9443111912 என்ற எண்களில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 9498794987 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள அதிகம் SHARE செய்து உதவுங்க!

News February 8, 2026

கடலூர்: மாணவியை கடத்திய 16 வயது சிறுவன் கைது

image

நெய்வேலி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயதான மாணவி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் இருந்த மாணவி திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மாணவியை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து நெய்வேலி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவியை கடத்தி சென்ற வடலூர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவனை நேற்று கைது செய்தனர்.

error: Content is protected !!