News October 14, 2025
கடலூர்: ரேஷன்கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

ரேஷன் கார்டுகளில் மாற்றம் செய்ய போறீங்களா? தமிழக அரசு ரேஷன் கார்டுகளுக்கு கொண்டு வந்துள்ள புதிய நடைமுறைகள் இதோ: நபர்கள் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி மாற்றம், கார்டு மீண்டும் பிரிண்ட் செய்தல் போன்றவைகளை வருடத்திற்கு 2 முறை மட்டுமே ஆன்லைனில் செய்ய முடியும். எனவே மாற்றம் செய்யும் போது ஆவணங்களை சரிபார்த்து சரியா பண்ணுங்க.. ரேஷன் அட்டைகளில் மாற்றம் செய்ய<
Similar News
News October 14, 2025
வடகிழக்கு பருவமழை தொடக்கம்: ஆட்சியர் அறிவிப்பு

கடலூர் மாவட்டம் வடகிழக்கு பருவமழை பரவலாக மழை பெய்து வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை-2025 காரணமாக, பரவலாக மழை பெய்து வருவதால், நீர் நிலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளின் அருகில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
News October 14, 2025
கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில், பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்துக்காக, சிறப்பாக பங்காற்றிய 13-18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் மாநில அரசின் சார்பில், விருது மற்றும் ரூ.1 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டு வருகிறது. விருதுக்கு விண்ணப்பிக்க http://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் நவ. 29-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
News October 14, 2025
கடலூர்: தண்டவாளத்தில் தலை இல்லாமல் கிடந்த உடல்

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ரயில் நிலையத்திற்கும், மணிமுத்தாறு மேம்பாலத்திற்கும் இடையே நேற்று இரவு தண்டவளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவரின் உடல் கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.