News December 28, 2025
கடலூர்: ரூ.20 கட்டினால் போதும் ரூ.2 லட்சம் வரை காப்பீடு!

மத்திய அரசின் PMSBY காப்பீட்டு திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.20 செலுத்தினால் ரூ.2 லட்சம் பெறலாம். இதில் 18 முதல் 70 வயது வரை உள்ளவர்கள் சேரலாம். பாலிசிதாரருக்கு தற்செயலான மரணம் அல்லது ஊனம் ஏற்பட்டால் அவரது நாமினிக்கு தொகை வழங்கப்படும். இதில் விண்ணப்பிக்க அருகில் உள்ள வங்கி அல்லது அரசு காப்பீட்டு நிறுவனங்களை அணுகவும். சந்தேகங்களுக்கு 1800345033 என்ற எண்ணை அழைக்கவும். மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.
Similar News
News February 6, 2026
கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் உயர்கல்வி பயிலும் குழந்தைகளுக்கு, இணையவழி வாயிலாக திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கு பெற்றோர்கள் தங்களது நலவாரிய அடையாள அட்டையுடன் https://application.tnbocw.com/ என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என கடலூர் மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.
News February 6, 2026
கடலூர்: சிறுமி கர்ப்பம்; சிறுவன் மீது வழக்கு!

ரெட்டிச்சாவடியைச் சேர்ந்த 18 வயது பூர்த்தி அடையாத சிறுவனும், 17 வயது சிறுமி ஒருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது இருவரும் நெருங்கி பழகியதில், சிறுமி கருவுற்றார். இதையறிந்த சிறுவனின் தாய் அச்சிறுமியை தனது மகனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சிறுவன் மற்றும் உடந்தையாக இருந்த தாய் மீது நேற்று வழக்கு பதிவு செய்தனர்.
News February 6, 2026
கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (பிப்.05) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.06) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம்,விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது


