News July 8, 2025
கடலூர் ரயில் விபத்து: மின்கம்பி அறுந்து விழுந்து ஒருவர் பலி

கடலூர், செம்மங்குப்பம் அருகே இன்று காலை பள்ளி வேன் மீது ரயில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்நிலையில் பள்ளி வேன் மீது ரயில் மோதி ஏற்பட்ட விபத்தின் போது ரயில்வே கேட் அருகே நின்றிருந்த அண்ணாதுரை என்பவர் மீது மின்கம்பி அறுந்து விழுந்ததில், அவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News July 8, 2025
கடலூர் ஆட்சியர் மீது தெற்கு ரயில்வே குற்றச்சாட்டு

கடலூர் மாவட்டம், செம்மங்குப்பம் பகுதியில் இன்று (ஜூலை.8) காலை பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் ‘செம்மங்குப்பத்தில் சுரங்கப்பாதை அமைக்க கடந்த ஒரு வருடமாக ஆட்சியர் அனுமதி வழங்கவில்லை’ என தெற்கு ரயில்வே நிர்வாகம் பகீர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.
News July 8, 2025
கடலூர் ரயில் விபத்து: ரயில்வே சார்பில் நிவாரணம்

கடலூர் மாவட்டம், செம்மங்குப்பம் ரயில் விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படுகாயம் அடைந்த குழந்தைகளுக்கு நிவாரணமாக தலா ரூ.2.5 லட்சமும், லேசான காயம் அடைந்த மாணவருக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
News July 8, 2025
கடலூர்: கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கைது

கடலூர் மாவட்டம், செம்மங்குப்பம் பகுதியில் கேட்டை மூடாததால் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பள்ளி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்ததையடுத்து மத்திய பிரதேசத்தை சேர்ந்த கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை காவல் துறையினர் தற்போது கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது மட்டுமில்லாமல் அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.