News July 10, 2025
கடலூர் ரயில் விபத்து: திருச்சியில் 11 பேர் ஆஜர்

கடலூர் அருகே செம்மங்குப்பம் நேற்று முன்தினம் நடைபெற்ற ரயில் விபத்து தொடர்பாக 13 பேருக்கு ரயில்வே நிர்வாகம் சம்மன் அனுப்பியது. இந்நிலையில் இன்று ரயில் லோகோ பைலட் சக்தி குமார், உதவி லோகோ பைலட் ரஞ்சித் குமார், ரயில் நிலைய அதிகாரிகள் விக்ராந்த் சிங், அஜித்குமார், விமல், அங்கித் குமார், ஆனந்த், வடிவேலன் உட்பட 11 பேர் இன்று திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
Similar News
News July 10, 2025
சான்றிதழ்களை பெறுவதற்கான வரைமுறைகள்( 2/1)

E-பெட்டகம் செயலியில் தற்போது வரை ஒரு குறிப்பிட்ட அளவிலான சான்றிதழ்களை மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும். கூடிய விரைவில் அனைத்துவிதமான சான்றிதழைகளையும் இந்த E- பெட்டகம் செயலில் பதிவிறக்கம் செய்யலாம். மேலும் 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு உள்ள சான்றிதழ்களை மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும். 2015 ஆம் ஆண்டுக்கு முந்தை சாற்றிதழ்களை பெற முடியாது. SHARE IT NOW
News July 10, 2025
திருச்சி: இந்த சான்றிதழ்கள் உங்களிடம் இல்லையா? ( 1/1)

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது<
News July 10, 2025
திருச்சி: லஞ்சம் பெற்ற அதிகாரி கைது

திருச்சி மணிகண்டம் மேக்குடி கிராமத்தில் புதிய வீடு கட்டுவதற்காக தற்காலிக மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்த பிரவீன் குமார் என்பவரிடம் மணிகண்டம் மின்வாரிய வணிக ஆய்வாளர் அருளானந்தம் பத்தாயிரம் லஞ்சம் கேட்டு பெற்ற போது திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி மணிகண்டன் தலைமையிலான குழுவினர் கையும் களவுமாக பிடித்து இன்று நண்பகல் கைது செய்தனர். கைதான அருளானந்தத்திடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்