News October 17, 2025
கடலூர்: ரயில் மோதி இளைஞர் பலி

திருவதிகை அடுத்த நரிமேட்டைச் சேர்ந்தவர் தேசிங்கு (22). மாற்றுத்திறனாளியான இவர் நேற்று பண்ருட்டி அருகே தண்டவாளத்தில் நடந்து சென்றுள்ளார். அப்போது சென்னையில் இருந்து கடலூர் நோக்கி சென்ற ரயில் வருவதை கவனித்த அவர், தண்டவாளத்தில் இருந்து நகர முயன்றுள்ளார். ஆனால், அதற்குள் ரயில் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின் உடலை கைப்பற்றிய ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 20, 2025
கடலூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, கலை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் மகளிருக்கு ஆண்டுதோறும் சர்வதேச மகளிர் தினத்தன்று (மார்ச் 8) தமிழக முதலமைச்சரால் வழங்கப்படும் ஒளவையார் விருதுக்கு, கடலூர் மாவட்டத்தில் தகுதி உடையவர்கள் https://awards.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக வரும் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கடலூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார்
News December 20, 2025
கடலூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, கலை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் மகளிருக்கு ஆண்டுதோறும் சர்வதேச மகளிர் தினத்தன்று (மார்ச் 8) தமிழக முதலமைச்சரால் வழங்கப்படும் ஒளவையார் விருதுக்கு, கடலூர் மாவட்டத்தில் தகுதி உடையவர்கள் https://awards.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக வரும் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கடலூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார்
News December 20, 2025
கடலூர்: கோடி கோடியாக மோசடி செய்தவர் கைது

நெய்வேலி இந்திரா நகரை சேர்ந்தவர் தமிழ் வேந்தன் (60). என்.எல்.சி. தொழிலாளியான இவர் நெய்வேலி, விருத்தாசலம் பகுதி மக்களிடம் ரூ.3 லட்சம் கொடுத்தால் ஆறு மாதத்திற்கு பிறகு 3 கோடி தருவதாக கவர்ச்சிகரமான திட்டங்களை கூறி 100-க்கும் மேற்பட்டவர்களிடம் பணம் வசூலித்து ரூ.5 கோடி வரை மோசடி செய்துள்ளார். இது குறித்து நெய்வேலி போலீசார் வழக்கு பதிந்து நேற்று தமிழ் வேந்தனை கைது செய்தனர்.


