News November 20, 2025

கடலூர்: ரயில் முன் பாய்ந்து தற்கொலை முயற்சி

image

நெய்வேலி இந்திராநகர் பகுதியில் வசிப்பவர் அசோக்குமார் (44). மனநலம் பாதிக்கப்பட்ட இவர் நேற்று வடலூர் காட்டுக்கொல்லை ரெயில்வே கேட் அருகில் காரைக்கால் நோக்கி சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார். இதில் அவரது இடது கால் துண்டான நிலையில், அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்தனர். இதுகுறித்து கடலூர் ரெயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News November 21, 2025

கடலூர் மாவட்டத்தில் 10.90 மி.மீ மழை பதிவு

image

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது‌. இந்நிலையில் இன்று (நவம்பர் 21) காலை 8.30 மணி நிலவரப்படி, சிதம்பரம் 3 மில்லி மீட்டர், அண்ணாமலை நகர் 3 மில்லி மீட்டர், காட்டுமன்னார்கோவில் 3 மில்லி மீட்டர், லால்பேட்டை 1 மில்லி மீட்டர், பரங்கிப்பேட்டை 0.2 மில்லி மீட்டர், கடலூர் 0.1 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 10.90 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

News November 21, 2025

கடலூர்: வெளுத்து வாங்க போகும் மழை!

image

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் நவ.21-ம் தேதி (இன்று) முதல் நவ.26-ம் தேதி (புதன்கிழமை) வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

News November 21, 2025

கடலூர்: அரசு அலுவலகம் செல்ல வேண்டாம்- இது போதும்!

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் போன்றவற்றை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம்.
1. பான்கார்டு: NSDL
2. வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in
3. ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/
4. பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink
5. இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!