News July 9, 2025

கடலூர்: ரயில்வே கேட் கீப்பருக்கு சிறை

image

கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில் நேற்று (ஜூலை 08) காலை தண்டவாளத்தை கடந்த பள்ளி வாகனம் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ரயில் மோதி 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் செம்மங்குப்பம் ரயில்வே கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை நேற்று கைது செய்த போலீசார், அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, சிதம்பரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Similar News

News July 9, 2025

கடலூர் ரயில் விபத்து : விசாரணையில் பகீர் தகவல்

image

கடலூர் அருகே நேற்று பள்ளி வாகனம் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் இதுபோல 5-க்கும் மேற்பட்ட முறை ரயில்வே கேட்டை திறந்து வைத்துவிட்டு தூங்கியுள்ளதாகவும், பணி நேரத்தில் தூங்குவதையே அவர் வழக்கமாக வைத்திருந்ததாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

News July 9, 2025

கடலூர்: ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு அரசு வேலை !

image

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1,910 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது. இதற்கு B.E / ஐடிஐ / டிப்ளமோ முடித்தவர்கள் வரும் ஜூலை.12-க்குள் <>இங்கே க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,000 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும். இதற்கான தேர்வு சிதம்பரத்தில் வரும் ஜூலை.31 அன்று நடைபெற உள்ளது. இந்த தகவலை உங்க நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News July 9, 2025

கடலூர்: விபத்தில் பறிபோன 3 உயிர்கள்

image

கடலூர் அருகே செம்மங்குப்பத்தில் நேற்று (ஜூலை 8) செவ்வாய்க்கிழமை நான் எங்க போட்டோ காலை பள்ளி வாகனம் மீது ரயில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மாணவி சாருமதி, மாணவர்கள் செழியன் (15) மற்றும் நிமலேஷ் ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் பலத்த காயமடைந்தவர்கள் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

error: Content is protected !!