News August 10, 2025
கடலூர்: ரத்தசோகை பரிசோதனை செய்ய 71 குழுக்கள்

கடலூர் மாவட்டத்தில் பொதுமக்களிடம் இரத்தசோகை பரிசோதனைக்காக மருத்துவர், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர், செவிலியர், சுகாதார ஆய்வாளர், கிராமப்புற மருத்துவ அலுவலர், மருந்தாளர் ஆகிய 6 நபர்களை கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது. மாவட்ட முழுவதும் மொத்தம் 71 குழுக்கள் உருவாக்கப்பட்டு, ஒரு குழுவின் மூலம் ஒரு வாரத்திற்கு 300 நபர்களை பரிசோதித்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 9, 2025
கடலூர்: பெற்றோர்கள் கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க !

கடலூரில் குழந்தை மற்றும் பணிக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பு கருதி தமிழ்நாடு அரசு உதவி எண்களை அறிவித்து உள்ளது. இதனால் அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய முடியும்.
✅பெண்குழந்தைகள் பாதுகாப்பு ( 1098 )
✅பெண்கள் பாதுகாப்பு ( 1091) ( 181 )
✅போலீஸ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவை ( 112 )
✅சைபர் கிரைம் பாதுகாப்பு ( 1930 )
இந்த எங்களை Save பண்ணி வைத்துக்கோங்க! மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News August 9, 2025
கடலூர் மாவட்ட செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம், திமுக கடலூர் மாவட்ட செயலாளர் மற்றும் திமுக மண்டல பொறுப்பாளர் மற்றும் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தலைமையில் காணொளி வாயிலாக இன்று (ஆகஸ்ட் 9) நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் திராவிட முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
News August 9, 2025
கடலூரில் குழந்தை பாக்கியம் தரும் கோவில்!

கடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பாக்கம் கிராமத்திலுள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுப்பிரமணியர் இடப்பக்கம் மயில் மீது அமர்ந்து சம்ஹாரமூர்த்தி காட்சி தருகிறார். இக்கோயில் மிக அபூர்வமான திருத்தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இங்கு குழந்தை இல்லாதோர் வாரம்தோறும் தேன் அபிஷேகம் செய்து மனமுருகி வேண்டினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள்!