News September 17, 2025
கடலூர்: மின் தடையா? சிறப்பு எண் அறிவிப்பு!

வடகிழக்கு பருவமழையின் போது மின் விபத்துகள் ஏற்படாத வகையில், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மேலும் மழைக்காலத்தில் பொதுமக்கள் மின் நிறுத்தம் மற்றும் மின் விபத்துக்கள் ஏதேனும் ஏற்பட்டால் 94987 94987 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு எந்த நேரத்திலும் தகவல் தெரிவிக்கலாம். இது தவிர 94458 55768 என்ற மண்டல வாட்ஸ்-அப் எண்ணிலும் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
Similar News
News September 17, 2025
கடலூர்: இன்று சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

கடலூர் மாவட்டம், கோவிலானூர் கிராமத்தில் அமைந்துள்ள மாதா பள்ளி, நல்லூர் வட்டம், தொளார் அரசினர் மேல்நிலைப்பள்ளி, மற்றும் பண்ருட்டி பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபம் ஆகிய இடங்களில் இன்று (17/09/2025) புதன்கிழமை உங்களுடன் ஸ்டாலின் முகாம் சிறப்பு நடைபெற உள்ளது. இதில், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
News September 17, 2025
கடலூர்: கிணற்றில் தவறி விழுந்து பெண் உயிரிழப்பு

குறிஞ்சிப்பாடியை சேர்ந்தவர் பாஸ்கர் (44). இவரது மனைவி சத்தியவாணி (42). இவர் பெரியார் நகரில் உள்ள ராமலிங்கம் வீட்டில் வீட்டு வேலை செய்து வந்தார். நேற்று காலை வீட்டு தோட்டத்தில் உள்ள 40 அடி ஆழமுள்ள கிணற்றின் அருகில் வேலை செய்யும் போது தவறி கிணற்றில் உள்ளே விழுந்த சத்தியவாணி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
News September 17, 2025
கடலூர்: ரூ.47.000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

கடலூர் மக்களே மத்திய அரசு வேலைக்கு செல்ல ஆசை இருக்கா? Union Public Service Commission (UPSC) காலியாக உள்ள Accounts Officer பதவிக்கான அறிவிப்பு வந்துள்ளது.
⏩மத்திய அரசு வேலை
✅நிறுவனம்: (UPSC)
✅பதவி: Accounts Officer
✅கல்வித்தகுதி: இளங்கலை பட்டம்
✅சம்பளம்: ரூ.47.000
✅வயது வரம்பு: 21 முதல் 50 வரை
✅ஆன்லைனில் விண்ணப்பிக்க.<
✅கடைசி நாள் 02.10.2025
இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!