News November 15, 2025

கடலூர்: மின்சாரம் தாக்கி முதியவர் பரிதாப பலி

image

நெய்வேலி அருகே சின்ன காப்பன்குளத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் நேற்று வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் மின்சார ஸ்விட்ச் பாக்ஸ் எரிந்த நிலையில் இருந்தது. அதற்கு கீழே அவரது தந்தை கலயபெருமாள் (85) இறந்த நிலையில் கிடந்தார். இதில், முதியவர் மின்சாரம் தாக்கி இறந்ததாக தெரியவந்தது, சுப்ரமணியன் கொடுத்த புகாரில் நெய்வேலி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Similar News

News March 5, 2026

கடலூர்: இரவு ரோந்து செல்லும் போலீசார் விபரம்

image

கடலூர், காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று (மார்.4) இரவு 10 மணி முதல் நாளை (மார்.5) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 4, 2026

வைக்கோல் எடுத்துச் சென்ற வாகனம் தீப்பிடித்து எறிந்தது

image

விருத்தாசலம் அருகே உள்ள கட்சிபெருமாநத்தைச் சேர்ந்த சிவ சங்கரமூர்த்தி (41) என்பவர் தன்னுடைய ஈச்சர் டிராக்டர் வாகனத்தில் (மார்ச்.4) வைக்கோல் ஏற்றி சென்று கொண்டிருந்தார்.
மேமாத்தூர் அருகே செல்லும்போது திடீரென எதிர்பாராத விதமாக வைக்கோல் தீப்பிடித்து எறிந்ததில் வாகனம் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது. இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 4, 2026

கடலூர்: எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்

image

கடலூர் மாவட்டம் காவல் அலுவலத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் தலைமையில், இன்று(மார்.4) மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில், காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமாரிடம் பொதுமக்கள் புகார் மனுக்கள் அளித்தனர். அதனைத் தொடர்ந்து சம்பந்தமாக காவல் கண்காணிப்பாளர் நேரடியாக விசாரணை மேற்கொண்டு, புகார் மனுக்கள் சம்பந்தப்பட்ட அலுவலகள் தீர்வு காண உத்தரவிட்டார்.

error: Content is protected !!