News September 26, 2025
கடலூர்: மின்சாரம் தாக்கி பரிதாப பலி

சிதம்பரம் அடுத்த வல்லம்படுகையை சேர்ந்தவர் காய்கறி வியாபாரி மோகன்(35). இவர் நேற்று இரவு அதே பகுதியில் நடந்து சென்ற போது, சாலையில் அறுந்து கிடந்த மின் கம்பியை எதிர்பாராத விதமாக மிதித்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கியதில் மோகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News February 15, 2026
கடலூர்: இனி ஒரு மிஸ்டு கால் போதும்!

கடலூர் மக்களே கேஸ் சிலிண்டர் புக் பண்ண இனி ஒரு மிஸ்டு கால் கொடுத்தா போதும். அதற்கு Bharatgas: 77150 12345, HP: 94936 02222, Indane: 84549 55555 ஆகிய எண்களுக்கு மிஸ்டு கால் கொடுத்தா… கேஸ் புக் பண்ண SMS உங்க போனுக்கு வரும்.சிலிண்டர் இணைப்புடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரில் இருந்துதான் மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.!
News February 15, 2026
கடலூர்: தேர்வு இல்லாமல் அரசு வேலை!

தமிழகத்தில் காலியாக உள்ள போஸ்ட் மாஸ்டர், கிளை மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2019
3. வயது – 18 – 40
4. சம்பளம்: ரூ.29,380
5. தகுதி: 10 ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 16.02.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News February 15, 2026
கடலூர்: கார் மோதி சம்பவ இடத்திலேயே பலி

சேத்தியாத்தோப்பு, கிளாங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மா (45). விவசாயியான இவர் நேற்று இரவு வயல்வெளிக்கு செல்வதற்காக தனது பைக்கில் வடலூர் சாலையில் சென்றார். அப்போது சேத்தியாத்தோப்பில் இருந்து வடலூர் நோக்கி வந்த கார் அவர் மீது மோதிய விபத்தில் தலையில் காயமடைந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தார். சேத்தியாதோப்பு போலீசார் அவர் உடலை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


