News December 25, 2025

கடலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் கோமாரி‌ நோய் தடுப்பூசி முகாம் கடலூர் மாவட்டத்தில் 29.12.2025 முதல் 28.1.2026 வரை நடைபெறுகிறது. இதில் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம் ஆகிய கோட்டங்களில் உள்ள 3 லட்சம் கால்நடைகளுக்கும் கோமாரி நோய் தடுப்பூசி போடப்படுகிறது. இதற்காக 83 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

Similar News

News December 26, 2025

கடலூர்: சான்றிதழ்கள் தொலைந்து விட்டதா?

image

கடலூர் மக்களே! 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். அதாவது <>இ-பெட்டகம் என்ற<<>> செயலியில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ளே சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th, கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News December 26, 2025

கடலூர்: இனி அலைச்சல் இல்லை!

image

அரசின் பல்வேறு சேவைகளைப் பெறுவதற்கு இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்:
1. ஆதார் : https://uidai.gov.in/
2. வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in
3. பான் கார்டு : incometax.gov.in
4. தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in
5. கடலூர் மாவட்ட நிர்வாக அறிவிப்புகளை அறிய: https://cuddalore.nic.in/
6. இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News December 26, 2025

21-ம் ஆண்டு நினைவு தினம்: கண்ணீர் கடலில் கடலூர்..

image

கடந்த 2006-ம் ஆண்டு, டிச.26-ம் தேதி தமிழக கடலோர பகுதிகளை சுனாமி பேரலை தாக்கியது. இதன் காரணமாக கடலூர், நாகை மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்த கோர சம்பவத்தின் 21-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, இன்று கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் பல்வேறு மீனவ அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் கண்ணீர் மல்க உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

error: Content is protected !!