News August 8, 2025
கடலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்கள் நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெற விருப்பமில்லை எனில் அவர்களது உரிமத்தினை விட்டுக்கொடுப்பது தொடர்பாக உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை வலைதளத்தின் (www.tnpds.gov.in) மூலமாக குடும்ப அட்டையினை பொருளில்லா குடும்ப அட்டையாக வகைமாற்றம் செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 8, 2025
கடலூர்: ஆடி வெள்ளி கிழமையான இன்று இதை தெரிஞ்சிக்கோங்க!

ஆடி மாதத்தில் நாம் என்ன செய்ய வேண்டும், செய்ய கூடாது
செய்யக்கூடியவை!
✅.இறை வழிபாடு
✅.நேர்த்திக்கடன்கள்
✅.தாலி சரடு மாற்றுதல்
✅.ஆடிப்பெருக்கு வழிபாடு
✅.கூழ் படைத்தல்
✅.விவசாயம்
செய்யக்கூடாதவை!
❎திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகள்
❎ வீடு மாற்றம் மற்றும் கிரகப்பிரவேசம்
❎ குழந்தைகளுக்கு மொட்டை அடித்தல்
❎வளைகாப்பு
❎பெண் பார்த்தல்
போன்றவற்றை செய்ய கூடாது. அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்கள்!
News August 8, 2025
கடலூர்: அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை

மாபெரும் தமிழ்க் கனவு” தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரைத் திட்டம் நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் அனைத்து துறை முதன்மை அலுவலர்களுடன் கடலூரில் இன்று (ஆக.8) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் இராஜசேகரன், பெரியார் கலைக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
News August 8, 2025
கடலூர்: சிறப்பு முகாமை ஆய்வு செய்த மேயர்

கடலூரில் இன்று (ஆகஸ்ட் 08) வார்டு 10,11,12 ஆகிய பகுதிகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு முகாமை கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த முகாமில் 10, 11 மற்றும் 12 ஆம் வார்டுகளுக்கு உட்பட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஆதார் அட்டையில் முகவரி மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பயன்களை பெற்றனர்.