News September 19, 2025

கடலூர் மாவட்ட ஆட்சியர் தகவல்

image

கடலூர் மாவட்டத்தில் இதுவரை நடைபெற்று உள்ள நலன்காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமில் 7,000-க்கும் மேற்பட்ட மருத்துவ பயனாளிகள் கலந்து கொண்டு பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். இம்முகாம்களில் மேல்சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்படும் பொதுமக்களுக்கு தலைமை மருத்துவமனைகளில் உயர்சிகிச்சை வழங்கி பொதுமக்களின் நலனை பாதுகாத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

Similar News

News September 19, 2025

கடலூரில் பெற்றோர்கள் கவனத்திற்கு… இது முக்கியம்!

image

கடலூர் மக்களே.. உங்கள் குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ் பள்ளி முதல் ஆதார், பாஸ்போர்ட் பெறுவதற்கு மிக முக்கியமானதாகும். பிறப்பு சான்றிதழ் பெற இனி அலைச்சல் வேண்டாம். புதிய சான்றிதழ் பெறுவதற்கும், தொலைந்த சான்றிதழ் பெறுவதற்கும் இங்கே <>க்ளிக் <<>>செய்து சுலபமாக பெற முடியும். மேலும் உங்கள் பகுதி பிறப்பு பதிவாளர், சுகாதார ஆய்வாளர் ஆகியோரை அணுகியும் பெற முடியும். இதனை LIKE மற்றும் SHARE பண்ணுங்க.

News September 19, 2025

கடலூர்: எச்.ஐ.வி. நோய் குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

image

கடலூர் டவுன்ஹால் அருகே எச்.ஐ.வி /எய்ட்ஸ் பால்வினை நோய் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தலைமையில் இன்று விழிப்புணர்வு உறுதி மொழியினை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். உடன் இணை இயக்குநர் (நலப்பணிகள்) மணிமேகலை, துணை இயக்குநர் (காசநோய்) கருணாகரன் உள்பட பலர் உள்ளனர்.

News September 19, 2025

வடலூர்: கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கல்

image

கடலூர் மாவட்டம், வடலூர் நகராட்சிக்கு உட்பட்ட 16 மற்றும் 17 ஆகிய வார்டு பகுதிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம் வடலூர் தனியார் மண்டபத்தில் இன்று காலை துவங்கியது. முகாமை மாவட்ட கல்வி குழு தலைவர் பொறியாளர் வி. சிவக்குமார் துவக்கி வைத்து கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகமும், மக்களை தேடி மருத்துவ பயனாளிகளுக்கு மருந்து பெட்டகமும் வழங்கினார்.

error: Content is protected !!