News December 19, 2025

கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் பதிவு செய்யாமல் செயல்படும் நன்னீர், உள்நாட்டு வெனாமி இறால் பண்ணைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். எனவே பதிவு செய்யாமல் இருக்கும் பண்ணை உரிமையாளர்கள் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 04142-243033 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Similar News

News December 29, 2025

கடலூர்: கணவரை கத்தியால் வெட்டிய மனைவி!

image

கடலூர் முதுநகர் அடுத்த கண்ணாரபேட்டையைச் சேர்ந்தவர் காசிநாதன் மனைவி சந்திரா (68). காசிநாதன் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து சந்திராவுடன் தகராறு செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த சந்திரா, காசிநாதனை கத்தியால் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த காசிநாதன் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து சந்திராவை கைது செய்துள்ளனர்.

News December 29, 2025

கடலூர்: போலி நகை அடமானம் வைத்த 2 பேர் கைது

image

மயிலாடுதுறையைச் சேர்ந்த ராஜேந்திரன் (31), செல்வமணி (32) இருவரும் சிதம்பரம் மாலை கட்டி தெருவில் உள்ள நகை அடகு கடையில் கடந்த டிச.22-ம் தேதி அன்று மருத்துவ செலவிற்குத் தேவைப்படுவதாக 24 கிராம் 916 நகை என கூறி அடகு வைத்து ரூ.1,90,000 ஆயிரம் பணம் பெற்றதாகக் கூறப்படுகிறது. பின்னர், போலி என அறிந்ததும் கடை உரிமையாளர் ஹீராசத் கோத்தாரி அளித்த புகாரின் பேரில் சிதம்பரம் போலீசார் இருவரையும் இன்று கைது செய்தனர்.

News December 29, 2025

கடலூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

கடலூர் மாவட்டத்தில் நேற்று (டிச.28) இரவு 10 முதல் இன்று (டிச.29) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!