News October 4, 2025
கடலூர் மாவட்டத்தில் 984 மாணவர்கள் சேர்க்கை

கடலூர் மாவட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், விஜயதசமியை முன்னிட்டு மழலையர் முதல் 8 ஆம் வகுப்பு வரை, விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 38 பேரும், கடலூர் கல்வி மாவட்டத்தில் 48 பேரும் என மொத்தம் 86 மாணவ, மாணவிகள் புதிதாக பள்ளியில் சேர்ந்துள்ளனர். அதுபோல தனியார் பள்ளிகளில் 898 மாணவர்கள் என கடலூர் மாவட்டம் முழுவதும் மொத்தமாக 984 மாணவ செல்வங்கள் தங்களது கல்வி பயணத்தை தொடங்கியுள்ளனர்.
Similar News
News April 4, 2026
கடலூர்: ரூ.88 லட்சம் விடுவிப்பு

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் 15.03.2026 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் அன்று முதல் தற்போது வரை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.95,33,841-ஐ பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அவற்றில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்ததால் ரூ.88,05,561 விடுவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
News April 4, 2026
கடலூர்: ரூ.88 லட்சம் விடுவிப்பு

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் 15.03.2026 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் அன்று முதல் தற்போது வரை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.95,33,841-ஐ பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அவற்றில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்ததால் ரூ.88,05,561 விடுவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
News April 3, 2026
கடலூர்: வீட்டு உரிமையாளர்களே உஷார்!

கடலூர் மக்களே, வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் கையெழுத்திட்ட 60 நாட்களுக்குள் கட்டாயம் ஆன்லைனில் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்பட வேண்டும். இதை செய்ய தவறினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இதுபோல வீட்டின் உரிமையாளர்கள் 2 மாத வாடகைக்கு மேல் அட்வான்ஸ் தொகை பெறக்கூடாது. ஷேர் பண்ணுங்க!


