News February 23, 2026
கடலூர் மாவட்டத்தில் 1,77,781 வாக்காளர்கள் நீக்கம்

கடலூர் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் இன்று வெளியிட்டார். மாவட்டத்தில் கடந்த 27.10.2025க்கு முன்பு 21,93,577 வாக்காளர்கள் இருந்தனர். எஸ்ஐஆர் திருத்தத்திற்கு பிறகு 19,46,759 வாக்காளர்களாக குறைந்தனர். இதனை தொடர்ந்து இறுதி வாக்காளர் பட்டியலில் 20,15,796 வாக்காளர்கள் உள்ளனர். 9 தொகுதிகளில் இருந்து 1,77,781 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News February 27, 2026
கடலூர்: மருமகனை வெட்டிய மாமனார் – போலீசார் வலை

ஆதிவராக நல்லூர் சேர்ந்த தம்பதியினர் ராகுல் காந்தி(29), ஐஸ்வர்யா(24). குடும்ப பிரச்சினைகள் ஐஸ்வர்யா கோபித்துக் கொண்டு பு. முட்லூரில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். அவரை அழைக்க சென்ற ராகுலை மாமனார் செல்வம், மைத்துனர் ஆகாஷ், மாமியார் கலையரசி ஆகியோர் கத்தியால் வெட்டி, ஆபாசமாக திட்டி உள்ளனர். இதுகுறித்த புகாரில் பரங்கிப்பேட்டை போலீசார் நேற்று 3 பேர் மீதும் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
News February 26, 2026
விவசாயிகள், வணிகர்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஏற்கனவே இ- நாம் 1 பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்பொழுது இ- நாம் 02 (e-NAM) இணையமாக மாற்றப்பட்டுள்ளது. இனி வேளாண் பொருட்கள் பரிவர்த்தனை இதன் மூலமே நடைபெறும். விவசாயிகள் மற்றும் வணிகர்கள் இ- நாம் 02 ல் பதிவு செய்து விளைப் பொருட்களை விற்று பயன்பெற மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் (பிப்.26) வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
News February 26, 2026
கடலூர்: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

கடலூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <


