News February 26, 2026
கடலூர் மாவட்டத்தில் 16 பி.டி.ஓ.க்கள் இடமாற்றம்

கடலூர் பி.டி.ஓ. மோகனாம்பாள் அண்ணாகிராமத்திற்கும், அண்ணாகிராமம் பி.டி.ஓ. வெங்கடேசன் மேல்புவனகிரிக்கும், மேல்புவனகிரி முருகன் குமராட்சிக்கும், குமராட்சி பெரியநாயகசாமி நல்லூருக்கும், நல்லூர் முருகன் மங்களூருக்கும், மங்களூர் சிவக்குமார் கம்மாபுரத்திற்கும் என மாவட்டம் முழுவதும் 16 பி.டி.ஓ.க்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் உத்தரவிட்டார்.
Similar News
News February 27, 2026
கடலூர்: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <
News February 27, 2026
கடலூர்: ஒரே அழைப்பில் உங்க பிரச்சனைக்கு தீர்வு!

இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், நம்மில் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இனி கவலை வேண்டாம்! நீங்கள் கடலூர் மாவட்டத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் சரி, ‘94987 94987’ என்ற TNEB Customer Care எண்ணை தொடர்புகொண்டு, உங்களது மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன்மேன் உங்கள் வீடு தேடி வருவார். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News February 27, 2026
கடலூர்: பொதுத்தேர்வு; 250 பறக்கும் படை நியமனம்!

கடலுார் மாவட்டத்தில் 248 பள்ளிகளுக்கு 161 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு மொத்தம் 30,039 பேர் தேர்வு எழுத உள்ளனர். இதில் 31 வழித் தட அலுவலர்களும், 129 முதன்மை கண்காணிப்பாளர்கள், 7 கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர் 129, 7 கூடுதல் துறை அலுவலர்கள், 2,100 அறை கண்காணிப்பாளர், 250 நிலைப் படை, பறக்கும் படையினர் தேர்வு பணியில் ஈடுபட உள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


