News March 30, 2025
கடலூர் மாவட்டத்தில் ரோந்து பணி செல்லும் அதிகாரிகள் முழு விவரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தினந்தோறும் ரோந்து பணி மேற்கொள்ள பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று (30ஆம்தேதி) கடலூரில் உதவி ஆய்வாளர் கணபதி, விருத்தாசலத்தில் உதவி ஆய்வாளர் ஜெயந்தி, சேத்தியா தோப்பில் உதவி ஆய்வாளர் கிருஷ்ணராஜ், பண்ருட்டியில் காவல் ஆய்வாளர் பரமேஸ்வர பத்மநாபன் மற்றும் திட்டக்குடியில் உதவி ஆய்வாளர் பாரதி ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளனர். அவர்களின் விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 26, 2026
கடலூர் மக்களே, மறக்காமல் கலந்து கொள்ளுங்கள்!

1. கடலூர் மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது
2. இதில் மக்கள் கலந்து கொண்டு கிராமத்தின் செலவு / வரவு கணக்குகளை பார்வையிட்டு கேள்வி எழுப்பலாம்.
3. கூட்டத்தில் கிராம மக்கள் ஒன்றிணைந்து தீர்மானம் இயற்றினால், அதனை அரசு/அதிகாரிகள் நினைத்தால் கூட ரத்து செய்ய முடியாது.
4. மக்களுக்கு முழு அதிகாரத்தையும் வழங்கும் கிராம சபை கூட்டத்தில் மறக்காமல் கலந்து கொள்ளுங்கள்!
News January 26, 2026
வடலூர்: ஜோதி தரிசனம் நேரம் அறிவிப்பு

கடலூர் மாவட்டம், வடலூர் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில், பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி தைப்பூச ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது. அன்று காலை 6 மணி, காலை 10 மணி, நண்பகல் 1 மணி, இரவு 7 மணி, இரவு 10 மணி பின்னர் பிப்ரவரி 2 ஆம் தேதி காலை 5. 30 மணி என 6 காலங்களில் ஏழு திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
News January 26, 2026
கடலூர்: தனியார் விடுதியில் இளைஞர் தற்கொலை

புவனகிரி வட்டம், மதுராந்தகநல்லூரை சேர்ந்தவர் ஹரிதாஸ் (26). திருமணமான இவர், அதே பகுதியைச் சேர்ந்த 24 வயது பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிதம்பரத்தில் உள்ள தனியார் விடுதியில் அப்பெண்ணுடன் தங்கியிருந்த ஹரிதாஸ் நேற்று இரவு திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிதம்பரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


