News August 17, 2025

கடலூர் மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில் வரும் ஆக.19-ம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் பரங்கிப்பேட்டை, பி.முட்லூர், பிச்சாவரம், ஸ்ரீ முஷ்ணம், ஊ.மங்களம், மேலப்பாலையூர், காட்டுமன்னார்கோவில், பழஞ்சநல்லுர், சிறுவரப்பூர், வெள்ளக்கரை, ஓதியடிக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 4, 2026

கடலூர்: தவாகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

image

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நேற்று 10-க்கும் மேற்பட்டோர் மாற்று கட்சிகளில் இருந்து விலகி, தங்களை தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைத்து கொண்டனர். இதையடுத்து விருதாச்சலம் நகர செயலாளர் இளையராஜா தலைமையில், புதிதாக இணைந்த உறுப்பினர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் நகர மற்றும் வார்டு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

News March 4, 2026

கடலூர்: கூடுதலாக 277 வாக்குச்சாவடிகள் உருவாக்கம்

image

கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குச்சாவடி மையங்களை, மறுசீரமைப்பு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் 2313 ஆக இருந்த வாக்குச்சாவடிகள் மறுசீரமைக்கப்பட்டு, தற்போது கூடுதலாக 277 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டு மொத்தம் 2,590 வாக்குச்சாவடிகளாக உயர்த்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

News March 4, 2026

கடலூர்: கூடுதலாக 277 வாக்குச்சாவடிகள் உருவாக்கம்

image

கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குச்சாவடி மையங்களை, மறுசீரமைப்பு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் 2313 ஆக இருந்த வாக்குச்சாவடிகள் மறுசீரமைக்கப்பட்டு, தற்போது கூடுதலாக 277 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டு மொத்தம் 2,590 வாக்குச்சாவடிகளாக உயர்த்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!