News March 31, 2025
கடலூர் மாவட்டத்தில் தமிழகத்தின் முதல் ஏரி

தமிழகத்தின் முதல் ஏரி வீராணம் ஏரி ஆகும், இது கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோயில் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஏரி சோழர் காலத்தில் கி.பி. 907 முதல் 953 வரை வெட்டப்பட்டது. இதன் கொள்ளளவு 1465 மில்லியன் கனஅடி (1.46Tmc) ஆகும். கடலூர் மாவட்டத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரமாக இந்த ஏரி திகழ்கிறது. இந்த செய்தியை தெரியாதவர்களுக்கு பகிரவும்.
Similar News
News January 31, 2026
கடலூர்: ராணுவத்தில் வேலை- APPLY NOW

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள 381 SSC (Technical) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 381
3. வயது: 20 – 35
4. சம்பளம்: ரூ.56,100 – ரூ.1,77,500
5. கல்வித்தகுதி: B.E./B.Tech, Any Degree
6. கடைசி தேதி: 05.02.2026
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!
News January 31, 2026
கடலூர் மாவட்ட ஆட்சியர் தகவல்

கடலூர் மாவட்டத்தில் தற்போது யூரியா 6,900 மெட்ரிக் டன்னும், டி.ஏ.பி. உரம் 2,655 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 1,730 மெட்ரிக் டன்னும், காம்ப்லக்ஸ் உரம் 7,748 மெட்ரிக் டன்னும், சூப்பர் பாஸ்பேட் 1,541 மெட்ரிக் டன்னும் என மொத்தம் 20,653 மெட்ரிக் டன் உரம் இருப்பு உள்ளது. இந்த உரங்கள் விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்தார்.
News January 31, 2026
கடலூர்: சைக்கிள் மீது லாரி மோதி ஒருவர் பலி

காட்டுமன்னார்கோவில் அடுத்த கோவில்பத்து பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி வெள்ளைச்சாமி (60). இவர் நேற்று கச்சேரி ரோடு வழியாக சைக்கிளில் சென்றபோது, பின்னால் வந்த லாரி, சைக்கிள் மீது மோதியது. இதில் வெள்ளைச்சாமி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


