News April 24, 2024

கடலூர்: மாநகராட்சி சார்பில் தண்ணீர் பந்தல்!

image

கடலூரில் கடந்த 1 மாதமாக வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடலூர் மஞ்சக்குப்பம் தபால் நிலைய பேருந்து நிறுத்தம், செம்மண்டலம் சிக்னல் பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பல பகுதிகளில் கடலூர் மாநகராட்சி சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கடும் வெயிலில் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் பானையில் வைத்திருக்கும் தண்ணீரை பருகி தாகத்தை தீர்த்து செல்கின்றனர்.

Similar News

News February 10, 2026

சிதம்பரம்: 50 பவுன் தங்க காசு மாலை வழங்கிய பக்தர்

image

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற நடராஜர் கோவில் சித்சபையில் வீற்றுள்ள சிவகாமி அம்மனுக்கு அணிவிக்க சென்னையை சேர்ந்த பக்தர் சுப்ரமணியன் என்பவர் சுமார் 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான 50 பவுன் தங்க காசு மாலையை பொது தீட்சிதர்களிடம் வழங்கினார். அதனை பெற்றுக் கொண்ட பொதுதீட்சிதர்கள் சிறப்பு பூஜை செய்து சிவகாம சுந்தரி அம்பாளுக்கு அணிவித்தனர்.

News February 10, 2026

கடலூர்: தொலைந்த போனை மீட்க சூப்பர் வழி!

image

கடலூர் மக்களே.. உங்கள் Phone காணாமல் போனாலோ அல்லது திருட்டு போனாலோ பதற்றம் வேண்டாம். <>இங்கே கிளிக்<<>> செய்து, சஞ்சார் சாத்தி என்ற இணையதளத்திற்கு செல்லவும். பின் அதில் செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் உள்ளிட்ட தகவல்களை பதிவிட்டு எளிதாக Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-ஐ டிரேஸ் செய்து, Easy-ஆக கண்டுபிடிக்கலாம். SHARE பண்ணுங்க!

News February 10, 2026

மோடி அரசின் துரோகத்தை வீழ்த்துவோம் – பண்ருட்டி MLA

image

‘பத்தாண்டுகாலக் கார்ப்பரேட் அடிமைத்தனம்., இந்தியாவின் வளங்களை அந்நிய நாடுகளுக்குத் தாரைவார்க்கும் மோடி அரசு! விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அமெரிக்காவிற்கு தாரைவார்க்காமல் மோடி அரசின் துரோகத்தை வீழ்த்துவோம்’ என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான தி. வேல்முருகன் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!