News February 8, 2026

கடலூர்: மாணவியை கடத்திய 16 வயது சிறுவன் கைது

image

நெய்வேலி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயதான மாணவி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் இருந்த மாணவி திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மாணவியை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து நெய்வேலி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவியை கடத்தி சென்ற வடலூர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவனை நேற்று கைது செய்தனர்.

Similar News

News February 13, 2026

கடலூர்: ரூ.5 லட்சம் காப்பீடு! APPLY NOW

image

மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் வருடத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கும் PM-JAY திட்டம் செயல்பட்டு வருகிறது. உங்கள் குடும்பத்தில் அவசர மருத்துவ தேவைக்கு பணம் பெற இனி அலைய தேவையில்லை. PM-JAY செயலியில் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து அவசர கால மருத்துவ செலவை பூர்த்தி செய்யலாம். இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய<> இங்கே கிளிக்<<>> செய்யவும். திட்டம் குறித்து தெரியாதவர்களுக்கு Share செய்து தெரியப்படுத்துங்கள்.

News February 13, 2026

கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் உயர்கல்வி பயிலும் குழந்தைகளுக்கு, இணையவழி வாயிலாக திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கு பெற்றோர்கள் தங்களது நலவாரிய அடையாள அட்டையுடன் https://application.tnbocw.com/ என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என கடலூர் மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.

News February 13, 2026

கடலூர்: சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் கைது

image

திட்டக்குடி பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் (22). இவர் 17 வயது சிறுமியை காதலித்து, திருமணம் செய்து கொண்டு, தனது வீட்டில் தங்க வைத்து, பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்த சிறுமி கர்ப்பமாகி சிசு இறந்து விட்டது. இதுகுறித்து தகவல் அந்த மாவட்ட குழந்தைகள் நல குழு அலுவலர்கள் நேரில் சென்று விசாரித்தனர். அதைத் தொடர்ந்து புகாரின் பேரில் திட்டக்குடி மகளிர் போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!