News November 19, 2025
கடலூர்: மனைவி திட்டியதால் தற்கொலை

பண்ருட்டி திருவதிகையை சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி பிரபாகரன் (35). இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததால் பிரபாகரனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த பிரபாகரன் நேற்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News November 21, 2025
கடலூர் மாவட்டத்தில் 10.90 மி.மீ மழை பதிவு

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (நவம்பர் 21) காலை 8.30 மணி நிலவரப்படி, சிதம்பரம் 3 மில்லி மீட்டர், அண்ணாமலை நகர் 3 மில்லி மீட்டர், காட்டுமன்னார்கோவில் 3 மில்லி மீட்டர், லால்பேட்டை 1 மில்லி மீட்டர், பரங்கிப்பேட்டை 0.2 மில்லி மீட்டர், கடலூர் 0.1 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 10.90 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
News November 21, 2025
கடலூர்: வெளுத்து வாங்க போகும் மழை!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் நவ.21-ம் தேதி (இன்று) முதல் நவ.26-ம் தேதி (புதன்கிழமை) வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!
News November 21, 2025
கடலூர்: அரசு அலுவலகம் செல்ல வேண்டாம்- இது போதும்!

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் போன்றவற்றை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம்.
1. பான்கார்டு: NSDL
2. வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in
3. ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/
4. பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink
5. இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.


