News November 19, 2025

கடலூர்: மனைவி திட்டியதால் தற்கொலை

image

பண்ருட்டி திருவதிகையை சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி பிரபாகரன் (35). இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததால் பிரபாகரனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த பிரபாகரன் நேற்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Similar News

News April 6, 2026

கடலூர்: பள்ளி மாணவி கர்ப்பம்

image

நெல்லிக்குப்பம் அடுத்த தோட்டப்பட்டை சேர்ந்தவர் பிரவீன்(20). இவர் 12-ம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவியை காதலித்தார். மேலும் மாணவியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அடிக்கடி சென்று தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதில் மாணவி கர்ப்பமாகியுள்ளார். இதுகுறித்து பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசார், பிரவீன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

News April 6, 2026

கடலூர்: நேருக்கு நேர் மோதி விபத்து – தொழிலாளி பலி

image

பெண்ணாடம் அடுத்த கொத்தட்டையை சேர்ந்தவர் தொழிலாளி நேர்மராஜ்(42). இவர் நேற்று இரவு வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள் வாங்குவதற்காக பைக்கில் இறையூர் நோக்கி புறப்பட்டார். அப்போது எதிரே வந்த பைக் மோதியதில் படுகாயம் அடைந்த நேர்மராஜ், அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து பெண்ணாடம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News April 5, 2026

கடலூர்: உங்க Phone காணாமல் போனால் கவலை வேண்டாம்

image

கடலூர் மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இங்கு <<>>கிளிக் செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம். உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!