News November 19, 2025

கடலூர்: மனைவி திட்டியதால் தற்கொலை

image

பண்ருட்டி திருவதிகையை சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி பிரபாகரன் (35). இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததால் பிரபாகரனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த பிரபாகரன் நேற்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Similar News

News November 20, 2025

சுந்தரவாண்டி: படியில் இருந்து தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு

image

நெல்லிக்குப்பம் அடுத்த சுந்தரவாண்டியை சேர்ந்தவர் தெய்வ சிகாமணி(62). இவர் தனது வீட்டின் படியில் இறங்கிய போது, எதிர்பாராத விதமாக படியிலிருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். பின்னர் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தெய்வசிகாமணி, இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News November 20, 2025

கடலூர்: 10th போதும் அரசு வேலை!

image

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் காலியாக உள்ள 1383 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th, 12th, டிப்ளமோ, துறை சார்ந்த டிகிரி
3. கடைசி தேதி : 02.12.2025
4. சம்பளம்: ரூ.18,000 – ரூ.1,51,100
5. வயது வரம்பு: 18 – 40 (SC/ST – 45, OBC – 43)
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: CLICK <>HERE<<>>.
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க..

News November 20, 2025

கடலூர் மாவட்டத்தில் வேகமாக நிரம்பும் ஏரிகள்

image

கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 228 ஏரிகள் அமைந்துள்ளன. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக 54 ஏரிகள் 76% முதல் 99% வரை நிரம்பியுள்ளன. அதுபோல 83 ஏரிகள் 51% முதல் 75 சதவீதமும், 65 ஏரிகள் 26 முதல் 50% நிரம்பியுள்ளன. வெறும் 26 ஏரிகளில் மட்டுமே 25 சதவீதத்திற்கும் குறைவாக தண்ணீர் உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!