News March 31, 2025
கடலூர் மக்களே ரேஷன் கார்டில் கைரேகை வைக்கலயா?

கடலூர் மாவட்டத்தில் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் இன்றைக்குள் (மார்ச்.31) பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும். ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று அங்கு ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். (உடனே SHARE பண்ணுங்க)
Similar News
News April 2, 2025
கடலூர் அருகே ஒருவர் என்கவுண்டர்

கடலூர் அருகே உள்ள புதுச்சத்திரம் பகுதியில் லாரி ஓட்டுநரிடம் 6 பேர் கொண்ட கும்பல் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து அவர்களை போலீசார் தேடி வந்த நிலையில், வழிப்பறி கும்பலைச் சேர்ந்த விஜய் என்பவர் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார். என்கவுண்டர் செய்யப்பட்டவர் புதுச்சேரியைச் சேர்ந்த விஜய் என்பதும், அவர் மீது 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்துள்ளது.
News April 2, 2025
கடலூரில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை

கடலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ப்ராடக்ட் எக்ஸிக்யூடிவ் (product executive) பணிக்கான 100 இடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ரூ.15,000 ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பட்டப்படிப்பு முடித்தவர்கள் இங்கே <
News April 2, 2025
மது கடத்தினால் குண்டர் சட்டம் பாயும்- எஸ்.பி எச்சரிக்கை

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கலந்தாய்வு கூட்டம் எஸ்.பி ஜெயக்குமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. அதில் புதுச்சேரியில் இருந்து மதுபானம் கடத்துவோர் மற்றும் விற்பனை செய்வோரை கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தொடர் குற்றச் செயலில் ஈடுபடும் நபர்களை குண்டர் தடுப்பு காவலில் கைது செய்ய வேண்டும் என தெரிவித்தார்.